கோயம்பேடு - கோயம்பேடு மார்க்கெட்டில், லாரி மோதிய விபத்தில், பெண் உயிர்இழந்தார்.விழுப்புரம் மாவட்டம், அசோக புரியைச் சேர்ந்தவர், செல்வ பாக்கியம், 50.இவர், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், கீழே கிடக்கும் காய்கறிகளை சேகரித்து, மார்க்கெட் வெளியே விற்பனை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, மார்க்கெட், 7 எண் கேட் அருகே காய்கறி சேகரிக்கும் போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காயம் ஏற்றி வந்த லாரி, பின்னோக்கி எடுத்தபோது, அவர் மீது மோதியது.இதில், செல்வ பாக்கியம் மீது, லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE