அம்பத்துார் - அம்பத்துார், மேனாம்பேடு, இளங்கோ நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 27. நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி, குழந்தை மற்றும் தம்பி ஆகியோருடன், வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, மேனாம்பேடு, பாரதி நகரைச் சேர்ந்த தீபக், 19. இளங்கோ நகரைச் சேர்ந்த கார்த்திக், 21. யுவராஜின் மனைவியை ஆபாச வார்த்தைகளால், கிண்டல் செய்தனர். யுவராஜ், அவர்களை தட்டிக் கேட்டார்.அந்த இருவரும், யுவராஜை கல்லால் அடித்தனர். அவர்களை தடுக்க முயன்ற, அவரது மனைவியை, கீழே தள்ளி அட்டகாசம் செய்தனர். இது குறித்து விசாரித்த, அம்பத்துார் போலீசார், நேற்று இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE