தி.நகர்; சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்சை, பாண்டிபஜார் போலீசார் போராடி அப்புறப்படுத்தினர்.சென்னை, தி.நகர், தணிகாசலம் சாலை, எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இச்சாலையில், நேற்று மாலை, திடீரென, 3 அடி பள்ளம் ஏற்பட்டதுஇதில், அந்த வழியாக சென்ற, தடம் எண்: 47 வழித்தடம் கொண்ட, அரசு பஸ் சிக்கி கொண்டது. இது குறித்து, பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் பஸ்சை அப்புறப்புடுத்தி, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த, அதிகாரிகள் பள்ளத்தை சீரமைத்தனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE