சென்னிமலை: மதுரை, உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 30; மனைவி இறந்ததால், தாயாருடன் பெருந்துறை அருகே, துடுப்பதி, சிலேடர் நகரில் தங்கி, சிமெண்ட் ஷீட் பொருத்தும் கூலி வேலை செய்தார். கடந்த, 21ல் சானடோரியம் அருகில், முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மது குடிக்கும் தகராறில், அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் நான்கு பேர் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக பெருந்துறை, மேக்கூர், அபிப் ரகுமான், 27; ஈரோடு, கொல்லம்பாளையம், பிரபு, 23; பள்ளிபாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெயபிரகாஷ், 33, ஜெயசந்திரன், 31; ஆகியோரை கைது செய்தனர். நான்கு பேரையும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE