ஈரோடு: ராஜாஜிபுரத்தில் வீதியில் அமர்ந்து குடிமகன்கள் மது குடித்து, ரகளையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், போலீசில் நேரில் அளிக்கப்பட்ட புகாரால், பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜாஜிபுரம் வீதியில், வீதியோரங்களில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் தொல்லை அதிகமாக உள்ளது. அவ்வப்போது குடிமகன்கள் சண்டையிட்டு கொண்டு, தகாத வார்த்தை பேசி அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திரன், கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கோபிநாத்திடம், நேற்று முறையிட்டார். இதையடுத்து, வீதியில் குடிமகன்கள் அமர்ந்து, மது குடிக்காமல் இருக்கும் வகையில், போலீசார் அவ்வப்போது ரோந்து செல்ல, போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். ராஜாஜிபுரம் வீதியில் இனியாவது, குடிமகன்கள் அட்டகாசம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE