தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, உலிபுரம்புதூர், பெருமாள் அடிவாரம் பகுதியைச் சேர்ந்த, ஆறுமுகம் மகன்கள் தங்கவேல், 60, ராஜூ, 55. இவர்கள் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, தங்கவேல் விவசாய தோட்டம் வழியாக சென்றபோது, ராஜூ மனைவி தனலட்சுமி, 45, மாமியார் செல்லம்மாள், 70, ஆகியோர், வாக்குவாதம் செய்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த இருவரும், தங்கவேலை தள்ளிவிட்டனர். அதில், மயங்கி கிடந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். இதனால், தம்மம்பட்டி போலீசார், தனலட்சுமி, செல்லம்மாள் மீது, கொலை வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE