தர்மபுரி: மாவட்டத்தில், அதிகரித்து வரும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த, இரு புயலால், தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில், இரவில் மட்டும் காணப்பட்ட பனிப்பொழிவு, தற்போது, பகலில் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவால் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு செல்லும் நோயாளிகளை கூட, பல தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தொற்று பரவலால், பரிசோதனை செய்ய, டாக்டர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கூட்டம் அதிகரித்துள்ளது. பனி தாக்கத்திலிருந்து தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள, பொதுமக்கள், ஸ்வெட்டர், கம்பளி உள்ளிட்ட ஆடைகளை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE