தர்மபுரி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
இதில், மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன் பேசியதாவது: பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை, உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அரசு மட்டத்தில் முடிவெடுக்கும் வரை, பட்டதாரி அலுவலர்களின் பணியிறக்கத்துக்கு ஆணையிட்டுள்ள, வருவாய் நிர்வாக ஆணையாளரின் கடிதத்தை நிறுத்திவைக்க வேண்டும். சப்- கலெக்டர் பட்டியலை, நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த மாதம், நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், ஏற்றுக்கொண்ட வருவாய்த்துறை அலுவலர்களின், 12, அம்ச வாழ்வாதார கோரிக்கைகள் மீது, உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE