ஓசூர்: ஓசூர், அண்ணா நகரை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. தர்மபுரி மாவட்டத்திலுள்ள, தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்; கடந்த, 16ல் இரவு வீட்டில் ஷாப்பிங் சென்று வருவதாக கூறி சென்ற அவர், மீண்டும் திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்தார். ஆனால், மகள் இருக்குமிடம் தெரியாததால், நேற்று முன்தினம், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில், புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE