மேச்சேரி: மேச்சேரி சந்தைக்கு, தட்டைப்பயிறு வரத்து அதிகரிப்பால், கொள்முதல் விலை சரிந்தது. சேலம் மாவட்டம், மேச்சேரி சுற்றுப்பகுதியில், விவசாயிகள் மானாவாரி பயிர்களில் ஒன்றான தட்டைப்பயிறை, அதிகளவில் சாகுபடி செய்வர். தற்போது, அறுவடை தொடங்கிய நிலையில், மேச்சேரி சந்தைக்கு, தட்டைப்பயிறு வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, 3 டன் வரை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதனால், அதன் விலை, குவிண்டால், 5,000 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஒரு மாதத்துக்கு முன், வரத்து, 1 முதல், 1.5 டன் வரை மட்டும் இருந்த நிலையில், குவிண்டால், 5,700 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். தற்போது, வரத்து அதிகரிப்பால், நேற்று, கொள்முதல் விலை சரிந்ததாக வியாபாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE