சேலம்: நிலக்கடலை வரத்தில் சரிவால், பச்சை, வறுத்த நிலக்கடலை பருப்புகளின் விலை, கிலோவுக்கு, 6 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தின் நிலக்கடலை தேவையில், 60 சதவீதம், உள்ளூரில் விளைவிக்கப்படும் நிலையில், 40 சதவீதம், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து, விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நடப்பாண்டு, தமிழகத்தில் நிலக்கடலை விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. ஆந்திரா, கர்நாடகாவில் விளையும் நிலக்கடலையை, வடமாநில வியாபாரிகள் மொத்தமாக வாங்கிவிடுகின்றனர். இதனால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு, நிலக்கடலை வரத்து சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை, வாரம், 120 லாரிகளில் வந்த நிலக்கடலை, தற்போது, 70 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், பச்சை, வறுத்த நிலக்கடலை பருப்புகள் விலை, கிலோவுக்கு, ஆறு ரூபாய் உயர்ந்தது. அதன்படி, பச்சை நிலக்கடலை பருப்பு முதல் ரகம் கிலோ, 124க்கு விற்றது, 130 ரூபாய், இரண்டாம் ரகம், 120க்கு விற்றது, 128 ரூபாய், மூன்றாம் ரகம், 110க்கு விற்றது, 116 ரூபாயாக உயர்ந்தது. வறுத்த நிலக்கடலை பருப்பு முதல் ரகம், கிலோ, 128க்கு விற்றது, 134 ரூபாய், இரண்டாம் ரகம், 120க்கு விற்றது, 126 ரூபாய், மூன்றாம் ரகம், 110க்கு விற்றது, 116 ரூபாயாக உயர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE