கரூர்: கரூர் அருகே குழந்தையுடன், மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், 35; சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சந்தியா, 23, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில், ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, ரவிக்குமார் போலீசில் புகார் செய்துள்ளார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE