கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் காட்டுவாரி வாய்க்காலில், நாணல் செடிகள் வளர்ந்து வருகின்றன. கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் வழியாக காட்டுவாரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலுக்கு, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது காட்டுவாரி வாய்க்காலில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், பாசனத்திற்கு குறைவான தண்ணீரே செல்கிறது. ஆகையால், இந்த வாய்க்காலில் வளர்ந்து வரும் நாணல் செடிகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE