மல்லசமுத்திரம்: வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், அரசு அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று, மல்லசமுத்திரம், பா.ம.க., செயலாளர் சங்கர் தலைமையில், பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, அலுவலர்களிடம் மனு அளித்தனர். பேரூராட்சி தலைவர் பாபு, மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* ப.வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி மற்றும் மோகனூர் டவுன் பஞ்., அலுவலகங்கள் முன், பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, செயல் அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE