நாமக்கல்: தமிழ்நாடு மாநில பண்டார குலம் முன்னேற்ற நல அறக்கட்டளை சார்பில், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் நடந்தது. நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் நடேசன் தலைமை வகித்தார். பூசாரிகளுக்கு ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட்ட, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலைத்துறை பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். அனைத்து பூசாரிகளுக்கும், நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் அய்யப்பன், இணைத் தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE