சென்னை: தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE