திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது குழந்தை ஹரிணி, 2. நேற்று பகல், 12:00 மணியளவில், குழந்தை ஹரிணி வீட்டின் அருகே இருந்த பூச்செடியில் பூப்பறிக்க சென்றது. அப்போது, அங்கு திறந்திருந்த, 5 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. தாய் வித்யா, குழந்தையை மீட்டு, இருவேல்பட்டு அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார். பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE