பெங்களூரு: கர்நாடகாவில் இன்று(டிச.,24) முதல் அமலாக இருந்த இரவு நேர ஊரடங்கை திரும்ப பெற்று கொள்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
புதிய கொரோனா வைரசின் தீவிரத்தை உணர்ந்து, கர்நாடகா மாநிலம் முழுதும், இன்று(டிச.24) முதல் வரும் ஜன., 2 வரை, இரவு நேர ஊரடங்கு உத்தரவை, முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இரவு, 10:00 முதல், காலை, 6:00 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், அவசர கால பணிகளில் இருக்கும் நிறுவனங்கள் மட்டும், இரவிலும் திறந்திருக்க அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற்று கொள்ளப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைப்படி, சூழ்நிலையை ஆய்வு செய்த பின்னர், இரவு நேர ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற்று கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE