சென்னை:கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கைஎடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்.

சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது.அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE