திருநெல்வேலி:பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளராக திகழ்ந்த பேரா.தொ.பரமசிவன் காலமானார்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் தொ.பரமசிவன் 69. காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் முதுகலை தமிழ் பயின்றவர். மதுரை பல்கலையில் இவரது முனைவர் பட்ட ஆய்வேடான ‛அழகர்கோயில்' ஆய்வுகளுக்கான முன்னோடி நுாலாகும். இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளில் தமிழ்த்துறையில் பணியாற்றியுள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவராக 98 முதல் 2008 வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அறியப்படாத தமிழகம், சமயங்களின் அரசியல் உள்பட 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல்முறைகள் குறித்த சிறந்த பேச்சாளர். தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்காக நடிகர் கமலஹாசன், இவரது வீட்டிற்கு வந்து ஆலோசனைகள் பெற்றுச்சென்றார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை காலமானார். இறுதிசடங்குகள் இன்று நடக்கிறது. நடிகர் கமலஹாசன், தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத்துயரம்..என பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE