புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, 96.93 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 24 ஆயிரத்து, 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதையடுத்து, நாட்டில், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 778 ஆக உயர்ந்துள்ளது.இதில், இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 849 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுவோர் விகிதம், 2.80 சதவீதமாக குறைந்து உள்ளது.கடந்த ஒரே நாளில், 29 ஆயிரத்து, 791 பேர், வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டனர். இதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை, 96 லட்சத்து, 93 ஆயிரத்து, 173 ஆக உயர்ந்துள்ளது. மீண்டோர் விகிதம், 95.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனாவால், 312 பேர் உயிரிழந்துள்ளனர்; இதில், அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 93 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல், மேற்கு வங்கத்தில், 34; கேரளாவில், 22; உத்தர பிரதேசத்தில், 21 உயிரிழப்புகளும் பதிவாகின.இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 756 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக குறைந்து காணப்படுகிறதுஇவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE