கோத்தகிரி:மத்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், 'சிக்கில் செல் அனிமியா' நோய் கண்டறியும் இயந்திரம், மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.கோத்தகிரி நீலகிரி ஆதிவாசி சங்க (நாவா) அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இயந்திர பயன்பாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ''இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து ரத்தத்தை எடுத்து, பரிசோதிக்க முடியும். சிகிச்சை தேவைப்பட்டால், ஆரம்பத்திலேயே நோயை குணப்படுத்த முடியும்.இந்த இயந்திரம் நாட்டில் ஐந்து இடங்களுக்கு மட்டுமே, மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசோதனை ஆதிவாசி மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து பிரிவினருக்கும் வழங்கப்பட உள்ளது,''என்றார்.தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்க் நினைவு பள்ளியில் நடத்தப்படும் 'ஆன்லைன்' வகுப்பை பார்வையிட்டார். பின்பு, கோத்தகிரி பனகுடி ஆதிவாசி கிராமத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு, ஏழு லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவு திறன் சார்ந்த வள மையத்தை திறந்து வைத்தார்.இதில், 'நாவா' செயலாளர் ஆல்வாஸ், ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE