சென்னை:புதிய வகை, கொரோனா தொற்று பீதியால், துபாய் செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து, சென்னைக்கு வரவேண்டிய, இரு சிறப்பு விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன.
பிரிட்டனில், உருமாறிய கொரோனா தொற்று பரவுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து, சிறப்பு விமானங்களில் வெளிநாடு செல்லும் பலர், தங்களது பயணங்களை ரத்து செய்து வருகின்றனர்.பிரிட்டன் உட்பட, யூரோப்பில் உள்ள நாடுகளில் இந்த பாதிப்பு இருந்தாலும், வளைகுடா நாடுகளுக்கு, விமானங்களில் செல்ல பயணியர் அச்சப்படுகின்றனர். இதனால், பல பன்னாட்டு விமான சேவைகள், போதிய பயணியர் இன்றி ரத்து செய்யப்படுகின்றன.
விமான சேவை ரத்து
சென்னையில் இருந்து, நேற்று நள்ளிரவு, 12:50 மணிக்கு, துபாய் செல்ல வேண்டியது மற்றும் துபாயில் இருந்து நேற்று காலை, 10:50 மணிக்கு சென்னை வரவேண்டிய, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானங்கள், போதிய பயணியர் இன்றி ரத்து செய்யப்பட்டன.'இந்த விமான சேவைகள், போதிய பயணியர் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தோர், வேறு தேதிகளில் பயணம் செய்யலாம்' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE