சென்னை:தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர்பாபு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபு, 57; கட்சியின் மாவட்டச் செயலராகவும் உள்ளார். இவர், தி.மு.க., நடத்திய பல்வேறு போராட்டங்களிலும், நிவாரணம் வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.தீவிர கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு, சில தினங்களாக காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகள் இருந்தன.
அவர் மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு, டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும், டாக்டர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE