வால்பாறை:வால்பாறையில், பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா சைக்கிள் வழங்கப்படவுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், நடப்பு கல்வியாண்டில், பள்ளி திறப்பு குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் பணி துவங்கியுள்ளன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறையில் உள்ள பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 385 விலையில்லா சைக்கிள் வழங்கப்படவுள்ளன.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள ஏழு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 385 சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. சைக்கிள்களின் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களாக நடந்தது. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விலையில்லா சைக்கிள்கள் விரைவில் வழங்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE