ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ரிசாட்டுக்கு அனுமதி கொடுத்த பேரூராட்சியை கண்டித்து கடல்தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
மண்டபம் தோப்புகாடு கடற்கரையில் தெர்மாகோல் படகு, சிறிய ரக நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்புவர். இக்கடலோரத்தில் தனியாருக்கு ரிசாட் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது.இதனால் மீன்களை இறக்கவும், மீன்பிடிக்க செல்லவும் இடையூறாக உள்ளதால் பேரூராட்சியை கண்டித்து நேற்று சி.ஐ.டி.யு., கடல் தொழிலாளர் சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகம் முன் மீன்பிடி வலைகள், தெர்மா கோல் படகுடன் 200க்கு மேலான மீனவர்கள் முற்றுகையிட்டனர். மாவட்ட நிர்வாகிகள் கருணாமூர்த்தி, சிவாஜி உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE