ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் தி.மு.க.,சார்பில் 12வது வார்டில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நகர் அவைத்தலைவர் கோகுல முருகானந்தம் தலைமை வகித்தார். நகர் செயலாளர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் வழங்கினர்.நகர் பகுதியில் காவிரி குடிநீர் தினசரி கிடைப்பதில்லை. இப்பகுதி முழுவதும் குப்பை நிரம்பியுள்ளது. சாலை வசதி இல்லை. ஊரணி கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தனர்.முன்னாள் எம்.பி., பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE