சென்னை:தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், நேற்று, 1,120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 70 ஆயிரத்து, 993 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 296; கோவையில், 98; சேலத்தில், 64 பேர் என மாநிலம் முழுதும், 1,035 பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெறுபவர்களில், சென்னையில், 337 பேர் உட்பட, 1,120 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, சென்னையில், 2,979; கோவையில், 948; செங்கல்பட்டில், 572 என, 9,217 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில், ஆறு பேர் உட்பட, 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை, 12 ஆயிரத்து, 36 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE