கிணத்துக்கடவு;கிணத்துக்கடவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதால், கழிவு நீர் செல்வதற்காக வடிகால் கட்ட பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவில் நான்கு வழிச்சாலை பணியில், மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. சர்வீஸ் ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இதில், மேம்பாலத்தில் இருந்தும், சர்வீஸ் ரோட்டில் இருந்தும் மழை நீர் வழிந்து செல்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் செல்வதற்கு வடிகால் வசதி இல்லை. ஏற்கனவே இருந்த கழிவு நீர் வடிகால், நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தில் இடிக்கப்பட்டது. தற்போது, கழிவு நீர் செல்வதற்கு வடிகால் வசதியின்றி தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகரித்து வருகிறது.இதற்கு, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கழிவு நீர் வடிகால் கட்ட வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE