உடுமலை:நகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க, சவரத்தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை நகராட்சிக்கு, தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்க கிளை சார்பில், அளிக்கப்பட்ட மனு: நாங்கள் பல ஆண்டுகளாக உடுமலை நகரில், சலுான் கடைகளை நடத்தி வருகிறோம். தற்போது, முடி திருத்தகம், ஸ்பா, அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டருக்கு, நகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவர், நாவிதர் சமூகத்தினர் காலம் காலமாக, இத்தொழிலை செய்து வருகிறோம். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, போதிய வருவாய் இல்லை. வாடகை கொடுக்கவே சிரமமான சூழ்நிலையில், குடும்பம் நடத்தி வருகிறோம். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர், எங்களது இன சலுான் கடைகளை, மட்டும், இந்த அறிவிப்பிலிருந்து, விலக்கு அளித்து, எங்கள் தொழிலை காப்பாற்ற உதவ வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE