மடத்துக்குளம்:மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில், தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளத்திலுள்ள நால் ரோடு பகுதி, பல கிராமங்களின் ரோடுகள் இணையும் இடமாகவும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இங்கு வங்கி, பள்ளி, அரசு மருத்துவமனை, ஏ.டி.எம்.,கள் மற்றும் பல கடைகள் உள்ளன.இப்பகுதியில், கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிர்வது இல்லை. இதனால் இரவு நேரம் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இரவு நேரங்களில் கடைகள் அடைக்கப்பட்ட பின், இருள் சூழ்ந்து விடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரே நாளில் பல கடைகளில் திருட்டு நடந்தது.தற்போது இரவு நேரம் இருள் சூழ்ந்து உள்ளதால், இந்த பகுதியைகடக்கும் பாதசாரிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்குத்தீர்வாக தெருவிளக்குகளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE