உளுந்துார்பேட்டை:வளர்ப்பு தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை, போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், தும்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாலுசாமி, 60. அதே பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள், 55. இவரது மகன் விஜயராம், 36.இருவரையும் பாலுசாமி, 30 ஆண்டுகளுக்கு முன், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளையூர், காந்தி நகருக்கு அழைத்து வந்து, குடும்பம் நடத்தினார். விஜயராம், கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து, 2,000 ரூபாயை தாய் வெள்ளையம்மாளிடம் கொடுத்துள்ளார். இரவு, 10:00 மணியளவில், விஜயராம் போதையில் வீட்டிற்கு வந்தார். தாயிடம், 2,000 ரூபாயைக் கேட்டு தகராறு செய்தார்.
வளர்ப்பு தந்தை பாலுசாமி கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயராம், வீட்டில் இருந்த, அரிவாள்மனையால் பாலுசாமியை வெட்டினார்; தடுத்த தாயையும் தாக்கினார். பாலுசாமி அதே இடத்தில் இறந்தார். வெள்ளையம்மாள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உளுந்துார்பேட்டை போலீசார், விஜயராமை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE