ராமநாதபுரம்:உலக கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவை நினைவுகூரும் வகையில், ராமநாதபுரத்தில், 6 அடி உயரத்தில் அவரது உருவத்தில், 'கேக்' செய்து, பேக்கரி முன் வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் பாரதிநகர் ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் வெங்கட சுப்பு, ஒருங்கிணைப்பாளர் சதீஷ் கூறியதாவது:ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, எங்கள் பேக்கரியில் கேக் சிலை செய்து, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
கடந்த ஆண்டுகளில் பாரதியார், இளையராஜா உருவ கேக் செய்து வைத்திருந்தோம்.இந்த ஆண்டு, அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் மாரடோனாவை நினைவுகூரும் வகையில், அவர் பந்தை லாவகமாக கடத்தி செல்வது போன்று, கேக் வடிவமைத்தோம். அர்ஜென்டினாவில் சிறிய நகரில் பிறந்து, அயராத முயற்சி, தளராத உழைப்பால், எண்ணற்ற கோல்கள் அடித்து, உலகையே அவரை நோக்கி திரும்ப வைத்தார்.
கால்பந்து என்றாலே, மாரடோனா தான் அனைவரின் நினைவிற்கும் வரும். சென்ற மாதம் இறந்த அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இளைஞர்கள் அலைபேசி, வீடியோ கேம்களில் பொழுதை வீணடிக்காமல், அவர் போன்று களத்தில் இறங்கி விளையாட வலியுறுத்தியும், இந்த கேக் சிலையை செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE