உடுமலை:உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், மின் சிக்கன வார விழா, விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.தேசிய மின் சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு, உடுமலை மின் பகிர்மான வட்டம் சார்பில், விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. எல்.இ.டி., மின் விளக்குகள் அமைத்தல், தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் உட்பட மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE