திருநெல்வேலி:பெண் போலீஸ் அணிந்திருந்த, 10 சவரன் நகையை பறித்துச் சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி, சி.பி.சி.ஐ.டி., போலீசில் பணியாற்றுபவர் மகாலட்சுமி, 36. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு பணி முடிந்து, ரெட்டியார்பட்டியில் உள்ள வீட்டுக்கு, 'டூ - வீலரில்' சென்று கொண்டிருந்தார்.என்.ஜி.ஓ., காலனியில் டூ - வீலரை நிறுத்தி, வீட்டுக்கு பொருட்கள் வாங்க இறங்கி செல்ல முயன்ற போது, காரில் வந்த சிலர், அவர் கழுத்தில் அணிந்திருந்த, 10 சவரன் நகையை பறித்து, தப்பினர். பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE