உடுமலை;உடுமலை ரயில்வே வழிதடத்தில், மீண்டும் அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கம் துவங்கியுள்ளது.திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயிலைசிறப்பு ரயிலாக இயக்க ரயில்வே அனுமதியளித்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்ட இந்த ரயில் உடுமலைஸ்டேஷனில், காலை, 6:28 மணிக்கு வந்து6:30 மணிக்கு கிளம்பியது. மதுரையிலிருந்துதிருவனந்தபுரம் செல்வதில், உடுமலைக்கு, மாலை, 7:13 மணிக்கு வந்தடைந்து, 7:15 மணிக்கு செல்கிறது.தற்போது இந்த ரயில் சேவை, கோவைதிண்டுக்கல் வழித்தடத்தில் மீண்டும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE