உடுமலை:உடுமலையில், தேசிய மாணவர் படை மாணவர்கள், தேசத் தலைவர்களின் சிலைகளை துாய்மைப்படுத்தினர்.உடுமலை, ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில், துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில், தேசிய மாணவர் படையினர், துாய்மைப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியிலுள்ள காமராஜர் சிலை, குட்டைத்திடலில் அமைந்துள்ள காந்தி சிலைகளை, பள்ளி, என்.சி.சி., மாணவர்கள் துாய்மைப்படுத்தினர். ஆசிரியர்களும், இந்நிகழ்வில் பங்கேற்று வழிகாட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE