சூலுார்:சூலுார் தாலுகாவுக்கு, 57 ஆயிரத்து, 500 வேட்டி, சேலைகள் வந்துள்ளன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படுகின்றன. சூலுார், தாலுகாவில், 96 ஆயிரத்து, 686 பேருக்கு சேலைகளும், 93 ஆயிரத்து, 406 பேருக்கு வேட்டிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, 57 ஆயிரத்து, 500 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. அவற்றை கிராம நிர்வாக அலுவலங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE