கருமத்தம்பட்டி:ஈங்கூர் --- அரசூர் இடையே உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஈடுபட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்காமல், நிலத்திற்கான இழப்பீட்டை வழங்காமலும், பல இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகளின் கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சோமனுார் அடுத்த செகுடந்தாளி பகுதியில், உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு ஊழியர்கள் வந்த போது, விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE