அவிநாசி:அவிநாசியை சேர்ந்த, 10 பேர் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில், அவர்கள் பேரூராட்சியின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.அவிநாசியில், இதுவரை, வெளிநாடு சென்று திரும்பிய, 10 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். இதில், நான்கு பேர் சார்ஜா, நான்கு பேர் பிஜூ தீவு சென்று வந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் கத்தார் நாட்டுக்கு தலா ஒருவர் சென்று வந்துள்ளனர்.அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர், அவர்களது வீடுகளை அடையாளம் கண்டு, அவரவர் வீடுகளின் அறையில், அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவது, இயல்பாகவே நடந்து வருகிறது.வெளிநாடு சென்று திரும்பியோர் யாராவது இருப்பின், தாங்களாகவே முன்வந்து, அரசு மருத்துவமனை அல்லது சுகாதார பிரிவினரிடம் தங்கள் குறித்த விவரத்தை தெரிவித்து, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE