திருப்பூர்:திருப்பூர், தொ.மு.ச., சார்பில், பி.என்., ரோடு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், கோர்ட் உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின் விபத்தில் பாதுகாக்க விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், மின்வாரியத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE