திருப்பூர்:திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று மூன்று சிறுவர்கள் சுற்றி கொண்டிருந்தனர்.சந்தேகப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், ரூரல் போலீசாருக்கு தகவல் அளித்தார்.மூவரையும் அருகேயுள்ள போலீஸ் செக் போஸ்டில் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.அதில், மூவரும் பிச்சம்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள், அதில் இருவர் அண்ணன் - தம்பி என்பதும் மற்றொருவர் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.பெற்றோர் கண்டித்ததால், மூன்று பேரும் நேற்று மாலை கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டுக்கு நடந்தே வந்துள்ளனர். பெற்றோரை வரவழைத்த, போலீசார் அறிவுரை கூறி சிறுவர்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE