திருப்பூர்:தமிழ்நாடு மின்வாரியம், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உட்பட பல நகரங்களில், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட 'மின்நுகர்வோர் சேவை மையம்' அமைத்துள்ளது. மின் நுகர்வோர், '1912' என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொண்டு, மின் தடை குறித்து, புகார் செய்யலாம்.பெறப்படும் புகார்கள், மின் தடை நீக்க பிரிவு ஊழியர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, பழுது சரி செய்யப்படுகிறது. ஆனால், மின் ஊழியர்களை சென்றடையும் குறுந்தகவல், ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் அனுப்பி வைக்க புதிதாக, 'சாப்ட்வேர்' தயாராகி வருகிறது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'சேவை மையத்தில் பெறப்படும் அழைப்புகள், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களுக்கு, மாற்றம் செய்யப்படுகிறது. பழுது நீக்க ஊழியர்களுக்கு ஆங்கிலம் தெரியாத நிலையில், பலரையும், மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கான குறுந்தகவலை தமிழில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE