புதுச்சேரி; சித்தலம்பட்டில் புதிதாக அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது.திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கிராமத்திற்கான துணை சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செயல்பட்டு வந்தது. இந்த துணை சுகாதார நிலைய கட்டடம் சேதம் அடைந்ததால், கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.அதனால், துணை சுகாதார நிலையம், சித்தலம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.புதிய துணை சுகாதார நிலையத்தின் கட்டுமானம், மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது.எனவே, புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE