புதுச்சேரி; மேட்டுப்பாளையத்தில் கஞ்சாவுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டை வளாகத்தில் நேற்றுமுன்தினம்ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திடமாக நின்றிருந்த வாலிபரை சோதனையிட்டனர். அவர், துணிபையில் அரை கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.விசாரணையில், அவர், காந்திதிருநல்லுாரை சேர்ந்த சந்தோஷ்,23, என்பதும், மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE