ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 2 கிராமங்களில் விவசாயிகளின் நண்பன் மோடி நிகழ்ச்சி நடந்தது.பா.ஜ., சார்பில் சூளாங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், மாவட்டச் செயலாளர் ஜெயதுரை, பொதுச் செயலாளர் செந்தில், துணைத் தலைவர் ஜோதிநாதன், மாவட்ட நிர்வாகிகள் யோகராஜன், தவமணி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு தீங்கு கிடையாது என விளக்கப்பட்டது.ஒன்றிய பொதுச் செயலாளர்கள் குழந்தைவேலு, செந்தில், பொருளாளர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஒன்றிய பொருளாளர் பாக்கியராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமகள், ஒன்றிய மகளிரணி தலைவர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE