கள்ளக்குறிச்சி,; தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்கள், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், பணி நிறைவு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு என ஐம்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு, மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இளையராஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் தமிழ்மணியன், பொருளாளர் கணேஷ் சிறப்புரையாற்றனர். ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தரம் வாழ்த்திப் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE