குறிஞ்சிப்பாடி; இடஒதுக்கீடு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சியை பா.ம.க.,வினர் முற்றுகையிட்டனர்.வன்னியர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு கோரி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலுார் பேரூராட்சிகளில் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்று, கோரிக்கை மனு அளித்தனர்.குறிஞ்சிப்பாடியில் மாநில துணை தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி முன்னாள் பேரூராட்சி தலைவர் தையல்நாயகி செல்வம், நகர செயலாளர் சுரேஷ், நகர தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோபி, தாமரைக்கண்ணன், மாணவரணி துணை செயலாளர் விஜயவர்மன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், செந்தில், விஜயகாந்தி, சிவராமசேது, சிவாஜி, தட்சிணாமூர்த்தி, ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.வடலுாரில் நகர தலைவர் செந்தில் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE