கடலுார்; புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை, மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.கடலுார் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் தலைமையில் கடலுார் கலால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த சுமோ காரை போலீசார் நிறுத்தினர். கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசாரும் பின் தொடர்ந்து விரட்டினர். கேப்பர்மலை அருகே வடுகப்பாளையம் காந்தி நகர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு ஓட்டிவந்த நபர் தப்பியோடிவிட்டார்.காரை போலீசார் சோதனை செய்ததில், 29 பெட்டிகளில் 1392 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் மதிப்பு ரூ. 70 ஆயிரம் ஆகும்கடலுார் கலால் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE