கடலுார்; கடலுார் மாவட்ட மகிளா காங்., சார்பில், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவி கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்., தலைவர் கலையரசன், இளைஞர் காங், மாநில செயலாளர் ராமதுரைசாமி முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்., உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் பேசினார்.நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், தாமோதரன், வீரம்மாள், சுமதி, ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE